'இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர்' - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

Governor RN Ravi Speech: தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 27, 2024, 02:28 PM IST
  • இந்த மாநாடு உதகையில் நடைபெற்றது.
  • இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்றனர்.
  • தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில் இருந்தது - ஆளுநர் ரவி
'இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர்' - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு title=

Governor RN Ravi Speech: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாடு உதகையில் உள்ள ராஜ்பவனில் இன்று (மே 27) காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 19 மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களும், மூன்று மத்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

'மோசமான நிலையில் இருந்த பல்கலைக்கழகங்கள்'

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, 2021ஆம் ஆண்டு தான் ஆளுநராக பொறுப்பேற்று பல்கலைக்கழகங்களின் வேந்தரான போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரம் குறைந்து மோசமான நிலையில் இருந்ததாகவும், ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் பிரச்சனைகளுடன் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக பேசினார்.

மேலும் படிக்க | வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு 29 முதல் பயிற்சி வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன்

அதனையடுத்து பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து அவற்றை ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உயர்கல்வியின் பாதுகாவலர்களாகவும் அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் தங்களது பங்கு இன்றி அமையாதது என்றார்.

கையேந்தும் நிலையில் இளைஞர்கள்
 
புதிய தேசிய கல்வி கொள்கை ஏராளமான ஆலோசனைக்கு பின் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் இந்த கல்வி கொள்கை நமது நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றார். மேலும், சுதந்தரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 6ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 11ஆம் இடத்திற்க்கு பின் தங்கிவிட்டதாகவும், தற்போது 5ஆம் இடத்திற்க்கு முன்னேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,"விரைவில் 3ஆம் இடத்திற்கு முன்னேற உள்ளோம். தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன் நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதில்காலம் கேள்விகுறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்க்கு முன்பு உலகின் பெரும் பொருளதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம்.

இதற்கு காரணம் அப்போது பின்ப்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். திருவள்ளுவரின் கற்பித்தல் குறித்து 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக' என்ற கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும் என்றும் கற்கும் முறையை பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. எனவே பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்" என்றார்.

மேலும் படிக்க | ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை - திருமா போடும் திடீர் குண்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News