ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு, அரசு மருத்துவனையில் படுக்கைகள் இல்லை - விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 19, 2023, 07:26 PM IST
  • தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு
  • மருத்துவமனைகளில் படுக்கை இல்லை
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு, அரசு மருத்துவனையில் படுக்கைகள் இல்லை - விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு title=

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள திமுகவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா காலாடி பட்டியில் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு விஜயபாஸ்கர் பொன்னாடை போர்த்தி வரவேற்று அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், திமுக மீது மக்கள் மத்தியில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டு விட்டது. 

மேலும் படிக்க | 'எனது உடல்நலனைவிட மக்கள் நலனே முக்கியம்' - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்

அந்த அதிருப்தி வாக்குச்சாவடிகளில் போய் சென்றடையும். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக அடுத்து ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதனால்தான் திமுகவிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் பலர் சேர்ந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் எல்லா தரப்பும் அதிருப்தியில் உள்ளனர். இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முன்னோடி மாநிலமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு சுகாதாரத்துறை மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு படுக்கைகள் இல்லை. அதேபோன்று காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாமிங் ஃப்ளூ மாத்திரை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வருடத்திற்கு 4000 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலம் ஆகியும் ஒரு மருத்துவ பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணம் காட்டி மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த கால ஆட்சியை குறை கூறுவதை விட்டுவிட்டு திமுக ஆட்சி  காலத்தில் செய்த சாதனை என்ன என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்.

தமிழக முழுவதும் 50 முதல் 40 சுகாதாரப் பணியிடங்கள் காலியாக உள்ளது இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தை திறனற்ற முறையில் கையாண்டதால் சுகாதாரத்துறை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளேன் என்னுடைய வார்த்தைகளை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஆலோசனையாக எடுத்துக் கொண்டு சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்... ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்? - முழு பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News