தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Last Updated : Aug 22, 2019, 03:00 PM IST
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்! title=

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ,ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தலா 10 செண்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 8 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதாலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Trending News