இன்றைய வானிலை முனறிவிப்பு: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Last Updated : Nov 2, 2020, 11:09 AM IST
இன்றைய வானிலை முனறிவிப்பு: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! title=

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த, 48 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | 90 வயது மூதாட்டியை கூட்டு பலாத்காரம் செய்த காம கொடூரர்கள்..!

மேலும், இன்றும் நாளையும் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

Trending News