உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

Happy Pongal 2023: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் தேவை அதிகரித்து காணப்படும் நிலையில், பொதுச்சந்தையை விடுத்து பலரும் உழவர் சந்தையை நாடி காய்கறி வாங்குவதால் அங்கும் விற்பனை அமோகமாக நடக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 14, 2023, 10:22 AM IST
  • 120 டன் காய்கறிகள் விற்பனை - நெல்லை உழவர் சந்தை.
  • சில காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
  • விற்பனை நேரத்தை நீட்டித்து அதிகாரிகள் உத்தரவு.
உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள் title=

Happy Pongal 2023: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு வழிபாடு நடத்தும் போது மண்ணில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதன்படி கிழங்கு வகைகள், காய்கறி வகைகள், கரும்பு உள்ளிட்டவைகள் வாங்குவதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்படுகிறது. 

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்தைகளிலும் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி காய்கறிகளை வாங்கி வருகின்றனர். நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மகாராஜ நகர் மற்றும் என்ஜிஓ காலனி உழவர் சந்தைகளில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். 

மேலும் படிக்க | Flowers Price: பொங்கலால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 120 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் சுமார் ரூ. 60 லட்சம் வரை விற்பனையாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

நேரடியாக விவசாயிகளிடம் இருந்து...

உழவர் சந்தைகளில் வியாபாரிகள் அல்லாமல் விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை வாங்கும் போது விலை குறைந்து நல்ல தரத்துடன் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதற்காக பாளையங்கோட்டையில் உள்ள உழவர் சந்தைகளில் 128 விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

சுமார் 50 ஆயிரம் நுகர்வோர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இன்றைய தினம் (ஜன. 14) மட்டும் 100 டன் காய்கறிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கூட்டம் அதிகம் வரும் நிலையை கருத்தில் கொண்டு இரவு வரை விற்பனையை அதிகரிக்க வியாபாரிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

விலை அதிகரித்து காணப்படும் காய்கறிகள்

கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முருங்கைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அந்த காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் ஒரு கிலோ 140 முதல் 150 வரையும், வெண்டைக்காய் கிலோ 70 முதல் 80 வரையும், கத்திரிக்காய் ரூபாய் 100 முதல் 120 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 

மேலும் படிக்க | Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News