கொரோனா காலத்தில் சூடு பிடிக்கும் மூலிகை பயிர்களின் நடவு: பண்டைய மருந்துகளுக்கு கூடும் மவுசு!!

நிலவேம்பு தமிழ்நாட்டில் ஏராளமாகக் காணப்படும், அதிகமான தேவையைக் கொண்ட ஒரு மூலிகைச் செடியாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 2, 2020, 01:10 PM IST
  • மூலிகை மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
  • நிலவேம்பு மற்றும் கடுக்காய் போன்ற பூர்வீக மூலிகைகளை நடவு செய்வதில் கூட்டுறவு விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.
  • மக்கள் தங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக பூர்வீக மூலிகை தாவரங்களின் நுகர்வுக்கு திரும்ப வேண்டும்
கொரோனா காலத்தில் சூடு பிடிக்கும் மூலிகை பயிர்களின் நடவு: பண்டைய மருந்துகளுக்கு கூடும் மவுசு!!  title=

நிலவேம்பு (Andrographis Paniculata)  தமிழ்நாட்டில் (Tamil Nadu)  ஏராளமாகக் காணப்படும், அதிகமான தேவையைக் கொண்ட ஒரு மூலிகைச் செடியாகும். இது இப்போது மாற்று பயிராகவும் வளர்க்கப்படுகிறது என்பதை தாவர உயிரியலில் வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

மூலிகை மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா மற்றும் டெங்கு சிகிச்சைக்கு அவசியமான மூலிகைகளை பயிரிடுவதில் ஏராளமான சாத்தியங்களும் லாபங்களும் உள்ளன. அவற்றில் சில மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் இருந்து வாங்கப்படுகின்றன என்று அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் மெடிசினின் இணை இயக்குனர் டாக்டர் பி பார்த்திபன் கூறுகிறார்.

கபசுர குடிநீர் (Kabasura udineer) மற்றும் நிலவேம்பு ஆகியவற்றின் அதிக அளவிலான நுகர்வு காரணமாக, நிலவேம்பு மற்றும் கடுக்காய் போன்ற பூர்வீக மூலிகைகளை நடவு செய்வதில் கூட்டுறவு விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.

கீழாநெல்லியின் தேவையும் அதிகரித்துள்ளது. தற்போதுள்ள உற்பத்தி மற்றும் நுகர்வு விகிதங்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. மருத்துவப் பயிர்களை வளர்ப்பதற்கு விவசாயிகள் அதற்கேற்ப அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் இந்த பருவத்தில் தமிழகத்தில் மசாலா பொருட்களுக்கான சாகுபடியும் அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவத்தில் ஒரு அடிப்படை அங்கமாக இருக்கும் ஏலக்காயின் விலை இப்போது அனவருக்கும் ஏற்ற வகையில் உள்ளது. முதல் தர ஏலக்காயின் மொத்த விலை ஒரு கிலோ 1000 ரூபாயாகக் குறைந்துவிட்டது. சில நேரங்களில் உயர் தர ஏலக்காய் கிலோவுக்கு 4000 ஆயிரம் ரூபாய் என்றும் விற்கப்படுகிறது.

தாவர பல்லுயிர் தன்மையால் தமிழகம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. மாற்று மருந்தியல் நடைமுறைகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான நேரம் இது என்றும் இந்த தாவரங்களின் ஆவணமயமாக்கல் மிகவும் முக்கியம் என்றும் தாவரவியல் உயிரியல் மற்றும் பூக்கள் ஆராய்ச்சி பேராசிரியராக இருக்கும் வகைபிரிப்பாளர் டி நரசிம்மன் விளக்குகிறார்.

தேனி மலைகள், கொல்லி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைப்பகுதிகள் மூலிகை மருத்துவத்தின் இயற்கை மூலமாகும். நமது மூலிகை தாவரங்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இருக்க வேண்டும். தற்போது, ​​கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு சாறுக்கு பயன்படுத்தப்படும் மூலிகை தாவரங்கள் பொதுவான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றில் அழிந்துபோகும் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால் மிகவும் சிறிய அளவில் உள்ள பல மருத்துவ தாவரங்கள் பட்டியலில் உள்ளன. வருங்கால சந்ததியினருக்கு இதுபோன்ற பூர்வீக தாவரங்களை பாதுகாப்பதற்கான உடனடி தேவை தற்போது உள்ளது என மூத்த தாவரவியலாளர் எச்சரித்தார்.

ALSO READ: கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க இலவங்கப்பட்டை உதவும்..!

“ஆடாதொடை, கருஞ்சீரகம், காட்டு நெல்லிகாய், கர்பூரவல்லி, கீரை, குப்பைமேனி, சிறுதேகு மற்றும் வெல்லம்பழம் ஆகியவை வழக்கமாக உட்கொள்ளப்படும் சில பொதுவான தாவரங்கள் ஆகும். ஆனால் உலகமயமாக்கல் மற்றும் மருந்தியல் தொழில்களின் தலையீடு காரணமாக மக்கள் இந்த மருத்துவ தாவரங்களை மறந்து விட்டார்கள்” என்று நேச்சர் டிரஸ்டின் நிறுவனர் கே.வி.ஆர்.கே திருநாரணன் கூறினார்.

மக்கள் தங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக பூர்வீக மூலிகை தாவரங்களின் நுகர்வுக்கு திரும்ப வேண்டும். மேலும் இந்த தாவரங்கள் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. ஆகையால் இனியாவது நம் பண்டைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை பக்கம் நாம் திரும்பிச் சென்றாலே அனைத்து வித வைரசையும் எதிர்த்தும் நாம் வெற்றி காணலாம்.

Trending News