பெரியார் சிலை அவமதிப்பு - கோழைத்தனமான செயல்கள்: ராமதாஸ் கண்டனம்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2020, 03:20 PM IST
பெரியார் சிலை அவமதிப்பு - கோழைத்தனமான செயல்கள்: ராமதாஸ் கண்டனம் title=

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், 

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 

 ALSO READ | "பெரியார்" சிலையை சேதப்படுத்திய சமூக விரோத சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது  என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை  அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத  கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்;  சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும்  தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்! 

 

ALSO READ | பெரியார் சிலை அவமதிப்பு: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை -ராமதாஸ்

கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும்,  சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும்!

என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Trending News