ஜல்லிக்கட்டு: சென்னையில் மாணவர்கள் போராட்டம்

Last Updated : Jan 17, 2017, 01:24 PM IST
ஜல்லிக்கட்டு: சென்னையில் மாணவர்கள் போராட்டம் title=

போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னையில் மாணவர்கள் போராட்டம். 

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி வாடிவாசல் அருகில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற போராடி வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தின் போது முழக்கங்களை மாணவர்கள் எழுப்பி வருகின்றனர். 

 

 

Trending News