ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Last Updated : Dec 5, 2019, 08:14 AM IST
ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று!! title=

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் உலா வந்தவர் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். இவரின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இவர்  திரையுலகில் மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். இதில், எம்.ஜி.ஆர்-வுடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். அதன்பின் 1982-ம் ஆண்டு ஜெயலலிதா அரசியலில் தடம் பதித்தார். இதையடுத்து, 1983-ம் ஆண்டில் அவரை அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார். 1984-ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு பெற்றார்.

கடந்த 1996 ஜூன் 14 தேதி இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38-ல் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டது. மேலும், 2016ம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்றுது. இவர் மொத்தம் 6 முறை முதல்வராக இருந்துள்ளார்.

உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்கள் தொடர்ந்து உயர் சிகிச்சைக்கு பின்னரும் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ம் தேதி தனது 68-வது வயதில் ஜெயலலிதா மரணமடைந்தார்.

இந்நிலையில், இவரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது  நினைவிடத்துக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக வருகை தந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Trending News