கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம் - பா.ரஞ்சித்

Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சியில் பலரின் உயிரைப்பறித்துள்ள கள்ளச்சாராய விவகாரத்தில் இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 20, 2024, 04:31 PM IST
  • கள்ளச்சாராய பலி சம்பவத்தால் கோபமாக ட்வீட்.
  • இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம் - பா.ரஞ்சித் title=

Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாரயத்தை குடித்து நூற்றுக்கும் மேலான நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என பல இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை

இதுவரை கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜன், அவரின் மனைவி விஜயா, கோவிந்தராஜனின் சகோதரர் தாமோதரன்மேலும், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கண் பார்வை இழப்பு, செவித்திறன் குறைப்பாடு, வயிற்று வலி, ரத்த வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இயக்குனர் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய அரசை சாடியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பா ரஞ்சித்., கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. 

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! 

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்! 

எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! முதலமைச்சர் உறுதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News