கட்டாயப்படுத்தி உடலுறவு! திருமணம் செய்ய மறுத்த இளைஞர்! சிறையில் அடைப்பு!

காதலித்து பலமுறை உடலுறவு வைத்து கொண்டு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த நபர் போலீசாரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2024, 03:42 PM IST
  • திருமணம் செய்ய மறுத்த இளைஞர்.
  • கைது செய்து சிறையில் யடைந்த போலீஸ்.
  • பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு.
கட்டாயப்படுத்தி உடலுறவு! திருமணம் செய்ய மறுத்த இளைஞர்! சிறையில் அடைப்பு! title=

சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு படித்து வந்தபோது ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
சதீஷ்குமார் தற்போது தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு கடந்த 2023ம் ஆண்டு தெரியவந்துள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம், 26ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழை.. நாமக்கல், திருச்சிக்கு ஆரஞ்சு அலெர்ட் - கனமழை கொட்டப்போகுது

பின்னர் மூன்று மாதத்தில் சதீஷ்குமார் திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறியதாகவும், இது குறித்து அந்தப் பெண் சதீஷின் வீட்டிற்கு சென்று கேட்டபோது தான் வேலை செய்யும் வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரை சதீஷ் காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதோடு அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை சதீஷ் பலமுறை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், கல்யாணத்திற்கு மண்டபத்தை பதிவு செய்வதற்கு முன் பணமாக அந்தப் பெண்ணிடம் சதீஷின் அம்மா மல்லிகா கேட்டதின் பேரில் அந்த பெண் அவரது வீட்டிற்கு தெரியாமல் வங்கியில் லோன் எடுத்து பணம் கொடுத்து அதற்கு வடியுடன் 1.70 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காதலித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை தனக்குத் தெரியாமல் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்ததாகவும் அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விடாமல் இருப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் பல்லாவரம் போலீசார் சம்பவம் தொடர்பாக 296(b), 115(2), 64, 318(2), 351(2), ஆகிய ஐந்து பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News