காதலிக்க சொல்லி மகளுக்கு தொல்லை..! கண்டித்த தந்தை..! கொலையில் முடிந்த சம்பவம்!

ஒருதலையாக காதலித்ததை எச்சரித்த பெண்ணின் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு ஆள் மாறி வேறொருவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பகீர் பின்னணியை தற்போது காணலாம்.   

Written by - S.Karthikeyan | Edited by - S.Karthikeyan | Last Updated : Oct 27, 2023, 02:36 PM IST
  • ஒரு தலை காதலில் விபரீதம்
  • போதை ஆசாமியின் வெறிச் செயல்
  • மதுரை காவல்துறை தீவிர விசாரணை
காதலிக்க சொல்லி மகளுக்கு தொல்லை..! கண்டித்த தந்தை..! கொலையில் முடிந்த சம்பவம்! title=

மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மோதிலால் தெரு பகுதியை சேர்ந்தவர் பொங்குடி மாயாண்டி. இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமானதை தொடர்ந்து அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.  

இந்நிலையில் நேற்று மதியம் திடீரென பொங்குடி மாயாண்டியின் வீட்டிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் மனைவி பாண்டியம்மாளின் கண் முன்பாகவே திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டிப்படுகொலை செய்தனர். இது தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் முதியவரை படுகொலை செய்ததாக மதுரை HMS காலனி ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த முத்தமிழன்  மற்றும் கோச்சடை  பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் என இரண்டு பேரை கரிமேடு காவல்துறையினர் கைது செய்தனர்.  இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது இருவரும் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க | அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது - குண்டாஸ் பாய வாய்ப்பு?

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரான முத்தமிழன் முதியவர் பொங்குடியின் வீட்டின் அருகேயுள்ள பெண் ஒருவரை ஒருதலையாக காதலிப்பதாக கூறி தினமும் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதையறிந்த அந்தப் பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தமிழனை பொதுவெளியில் வைத்து கண்டித்து அடித்துள்ளார். 

இதனால் தன் காதலுக்கு எதிராக உள்ள பெண்ணின் தந்தையை பழிவாங்குவதற்காக அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டியதாகவும்,  
இதற்கு 17 வயது சிறுவனையும் தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டுள்ளார். இதையடுத்து முத்தமிழன் தனது நண்பரான 17 வயது சிறுவனுடன்  சேர்ந்து நேற்று மதியம் அந்த பெண்ணின் தந்தையை தேடி கரிமேடு  பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தவறுதலாக பொங்குடியின் வீட்டுக்கதவை தட்டியுள்ளார். இருவரும் போதையில் இருந்ததால் பொங்குடியின் வீட்டிற்கு உள்ளே சென்று அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

முதலில் முகத்தை பார்க்காமல் வெட்டியவர்கள் அதன்பிறகு முதியவரின் முகத்தை தெளிவாக பார்த்ததும் ஆளை மாற்று வெட்டியது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பியோடி உள்ளனர். இந்த தகவல்களை தான் வாக்குமூலமாக முத்தமிழன் அளித்துள்ளார். இந்த கொலை குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொங்குடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரு தலையாக காதலித்த பெண்ணின் தந்தை காதலை கண்டித்ததால் மதுபோதையில் அவரை கொலை செய்ய சென்று ஆள் மாறி வேறொருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ’பாஜகவின் சதி திட்டம்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சூசகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News