பதவியேற்பு நாள் அன்றே முதல் கேள்வியை எழுப்பிய வைகோ...

பாராளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின் வைகோ மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் எழுப்பினார். 

Last Updated : Jul 25, 2019, 05:06 PM IST
பதவியேற்பு நாள் அன்றே முதல் கேள்வியை எழுப்பிய வைகோ... title=

பாராளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின் வைகோ மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் எழுப்பினார். 

கேள்வி நேரத்தின்போது, 347 ஆவது கேள்வி. இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் குறித்த கேள்வி ஆகும்.

ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வைகோ துணைக்கேள்வி எழுப்பியபோது அவர் பேசியதாவது, “அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.”

வைகோ இதைச் சொனானவுடன் அவையில் அமர்ந்து இருந்து பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றார்.

தொடர்ந்து வைகோ பேசியதாவது “பருத்தி விலை பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது.

மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று அமைச்சர் பதில் தருவாரா?

தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை ஏடுப்பாரா? (அமைச்சர் இதை மறுத்தார்)

சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகின்றார்க. அங்கே அந்த நாட்டு முத்திரை பதித்து இந்தியாவிற்குள் கொண்டு வந்து குவிக்கின்றார்கள். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவிப்பாரா?” என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தார்.

பின்னர் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என வைகோ தெரிவித்தார்.

Trending News