நியாயம் கேட்பவர்கள் இப்படிய செய்வார்கள் - கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு

உயிரிழப்புக்கு நியாயம் கேட்க சென்றவர்கள் இப்படியா செய்வார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 18, 2022, 06:08 PM IST
  • கள்ளக்குறிச்சி கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கைது
  • தாக்கப்பட்ட பள்ளியில் அமைச்சர்கள் ஆய்வு
  • தவறு செய்தவர்களை அரசு விடாது என அமைச்சர் வேலு எச்சரிக்கை
 நியாயம் கேட்பவர்கள் இப்படிய செய்வார்கள் - கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு title=

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தின்போது பள்ளிக்குள் சென்ற சிலர் அங்கிருந்து வாகனங்களையும், சான்றிதழ்களையும் எரித்தனர். மேலும் மேஜை, நாற்காலி போன்றவைகளையும் தூக்கி சென்றனர். நிலைமை கைமீறி சென்றதால் காவல் துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தக் கலவரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்குதான் காரணமென்று பலர் குற்றஞ்சாட்டிவரும் சூழலில் வன்முறையில் ஈடுபட்டதாக 250க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Kallakurichi Violence

இந்தச் சூழலில் பாதிப்புக்குள்ளான தனியார் பள்ளியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ. வேலு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, “மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்று கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர். தவறான தகவலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஜெய்பீம் பட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை வேண்டாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தவரவு

இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது. சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளித்தனர். போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு கைது நடவடிக்கை தொடரும். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. நியாயம் கேட்க சென்றவர்கள் இப்படியா செய்வார்கள்?. மாணவர்கள் என்ற பெயரில் வந்த விஷமிகள் இவர்கள்” என்றார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம்... உதயநிதி ஸ்டாலின் vs ரஜினிகாந்த் | சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News