மன்சூர் அலிகான் பேசியது வன்முறையை தூண்டும் செயல்: ஜெயக்குமார்!

பசுமை வழிச்சாலை விவகாரத்தில் மன்சூர் அலிகான் பேசியது வன்முறையை தூண்டும் செயல் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 18, 2018, 01:47 PM IST
மன்சூர் அலிகான் பேசியது வன்முறையை தூண்டும் செயல்: ஜெயக்குமார்! title=

பசுமை வழிச்சாலை விவகாரத்தில் மன்சூர் அலிகான் பேசியது வன்முறையை தூண்டும் செயல் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்!

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. 

இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது. 

இதையடுத்து, விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சாலைக்காக பல கோடி மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார். அப்போது அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் சென்னை சூளைமேட்டில் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறும்போது,,! பசுமை வழிச்சாலை விவகாரத்தில் மன்சூர் அலிகான் பேசியது வன்முறையை தூண்டும் பேச்சு எனவே தான் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

Trending News