பெப்சி விவகாரத்தில் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்: ரஜினிகாந்த் கோரிக்கை

Last Updated : Aug 2, 2017, 02:16 PM IST
பெப்சி விவகாரத்தில் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்: ரஜினிகாந்த் கோரிக்கை title=

பெப்சி வேலைநிறுத்தம் விவகாரத்தில் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில்:-

"எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று "வேலைநிறுத்தம்" என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசிகூடிய சீக்கிரம் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்"

என கோரிக்கை வைத்துள்ளார்

Trending News