தி. நகர் உள்பட சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி

சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2021, 10:23 AM IST
தி. நகர் உள்பட சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி title=

கொரோனா 3வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவது தொடர்ந்து காணப்பட்டால் அந்தந்த மாவட்ட அட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், போலீசார் அந்த பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதற்கிடையில் தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு (Lockdown) மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்டறிந்து அவற்றை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ALSO READ | வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் - தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு!

அத்துடன் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது. இதில், எடுக்கபட்ட முக்கிய முடிவுகளின்படி, சென்னை தி.நகர் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை; புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை; ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை; பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான வணிக வளாகங்கள் இருக்கும் 9 இடங்களில் கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி காலை 6 மணி வரை மூட உத்தரவிட்டு இருந்தார். 

அதன்படி மீண்டும் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் இன்று முதல் கடைகளை திறக்க வணிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. 

ALSO READ | கொரோனா பரவல் எதிரொலி; கோவையில் புதிய கட்டுபாடுகள் அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News