கடத்தப்பட்ட குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை 10 மணி நேரத்தில் போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். 

Last Updated : May 6, 2019, 09:57 AM IST
கடத்தப்பட்ட குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்ட போலீசார் title=

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை 10 மணி நேரத்தில் போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். 

காளியாபுரம் நரிக்கல்பதியை சேர்ந்தவர் பாலன், தேவிக்கு கடந்த 29ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து நேற்று இவர்கள் வீட்டிற்கு புறப்பட தயாராகிய போது குழந்தை காணாமல் போனது. இதையொட்டி பெண் ஒருவர் குழந்தையை எடுத்து சென்றது தெரியவந்தது. 

இது குறித்து உடனடியாக தேவி மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த பெண்ணை கண்டறிந்து தீவிரமாக தேடினர்.

இந்நிலையில், உடுமலை அருகே அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே புகார் அளித்த 10 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Trending News