ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசு அவர்களை புதுவை மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து முத்துவிழா வாழ்த்து தெரிவித்தார்!

Last Updated : Jul 27, 2019, 12:56 PM IST
ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு! title=

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசு அவர்களை புதுவை மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து முத்துவிழா வாழ்த்து தெரிவித்தார்!

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் 80-வது பிறந்தநாள் முத்து விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசு அவர்களை புதுவை மாநில முன்னாள் முதலமைச்சரும்,  என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ந.ரங்கசாமி, புதுவை மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சபாபதி ஆகியோர் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து முத்துவிழா வாழ்த்துகளை தெரிவித்தார்.  
அவர்களுக்கு முத்துவிழா மலரை மருத்துவர் அய்யா அவர்கள் வழங்கினார்கள். இந்த சந்திப்பின்போது புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கோ.தன்ராஜ் உடனிருந்தார்.

ராமதாஸின் 80-வது பிறந்தநாள் முத்து விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முத்துவிழா குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது., "பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, மக்களுக்காக உழைக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு, பல்லாண்டு காலம் நீடுழி வாழ, இறைவனை வேண்டி, என் இதயம் நிறைந்த பிறந்ந நாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில்., "பா.ம.க நிறுவனர், ராமதாஸ் எண்பது வயதினை நிறைவு செய்து 81 ஆம் வயதில் அடியெடுத்துவைத்து இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியை வளர்க்க, பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவியும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிட வகை செய்தும், சமூக நீதிக்காகவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், தமிழ் சமுதாயம் முன்னேறவும், பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பல்வேறு மகத்தான பணிகளை ஆற்றியுள்ள ராமதாசு சேவை மென்மேலும் தொடரவும், பல்லாண்டு காலம் நீடூழி வாழவும் மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News