மின் ஊழியர்கள் ஸ்ட்ரைக்! மின் தடை ஏற்படுமா?

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியா்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர். 

Last Updated : Feb 16, 2018, 08:43 AM IST
மின் ஊழியர்கள் ஸ்ட்ரைக்! மின் தடை ஏற்படுமா? title=

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியா்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர். 

கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு கையெழுத்திட்ட முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி தற்போது வரை ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முடிவுக்கு வராத நிலையில் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் இன்று தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Trending News