ஆர்கே நகர் இடைத்தேர்தல்: நாளை மாலை பிரசாரம் முடிவடைகிறது

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. 

Last Updated : Dec 21, 2017, 02:09 PM IST
ஆர்கே நகர் இடைத்தேர்தல்: நாளை மாலை பிரசாரம் முடிவடைகிறது  title=

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. நாளை மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

ஆர்.கே.நகரில் வாக்காளர் அல்லாதோர் நாளை மாலை 5 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது எனவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 10-ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Trending News