ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி - தம்பதியை சிறையில் அடைத்த காவல்துறை

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை கைது செய்த காவல்துறை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2021, 03:01 PM IST
ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி -  தம்பதியை சிறையில் அடைத்த காவல்துறை title=

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் திவ்யா - செந்தில் தம்பதியர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டில் மாதந்தோறும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். மாத ஏலச்சீட்டு, டேபிள் டேபிள் சீட்டு, ஸ்கூல் பண்டு, மாத பண்டு, தீபாவளி பண்டு, கிறிஸ்துமஸ் பண்டு உள்ளிட்ட பல பெயர்களில் சீட்டு நடத்தியுள்ளனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த பலரும், தங்களின் சிறுசேமிப்பை சீட்டாக கட்டி வந்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷன் என்பவர் உள்ளிட்ட 5 பேரும் அவர்களிடம் சீட்டு போட்டு வந்துள்ளனர். முறையாக சீட்டு கட்டி வந்த அவர்களுக்கு, முதிர்வு தேதியைக் கடந்த பின்னரும் தம்பதி பணத்தை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் நேரில் விசாரித்தபோதும் திவ்யா - செந்தில் முறையாக பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். 

ALSO READ | போதை மாத்திரை தராததால் இளைஞர் கொலை: கஞ்சா ஆசாமிகள் வெறிச்செயல்

தொடர்ந்து மாதக்கணக்காக இழுத்தடிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த பிரியதர்ஷன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் (Chennai Poice) அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சீட்டு மோசடி, கந்துவட்டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செந்தில் - திவ்யா குறித்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது, இதேபோல் பலரையும் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையில் தேடப்படுகிறோம் என அறிந்தவுடன், தம்பதியினர் தலைமறைவாகியுள்ளனர். தொடர்து விசாரணையில் ஈடுப்பட்ட காவல்துறையினர், இருவரையும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News