சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயைத் கொலை செய்த மகன்!

Crime: பொது சொத்து மற்றும் பொது கடனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை தடியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 26, 2022, 12:21 PM IST
  • கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்த கீழ்குப்பம் போலீஸார்.
  • வேலம்மாள் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார்.
  • சம்பவம் தொடர்பாக நான்கு பேர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீஸார்.
சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயைத் கொலை செய்த மகன்! title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலம்மாள் இவருடைய கணவர் முருகேசன், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலம்மாளுக்கு செல்வி என்ற மகளும், சுரேஷ் மற்றும் வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் வேலம்மாளுக்கு பொது சொத்து சுமார் 1.80 ஏக்கர் நிலம் மற்றும் பொது கடன் 16 லட்சம் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பொது சொத்து மற்றும் பொது கடனை வேலம்மாள் சரிசமமாக வாய் வழியாக பிரித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடனை அவரது மகன் சுரேஷ்குமார் ஏற்க மறுத்த நிலையில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் வேல்முருகனுக்கும் சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கௌதமி, அவரது மச்சான் கௌதம் ஆகியோர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறினை தடுக்க முயன்ற தாய் வேலம்மாள் மீது சுரேஷ்குமார் தரப்பினர் தடியால் தாக்கியதில், வேலம்மாள் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். 

மேலும் படிக்க | மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன் கொலை; பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்!

இது குறித்து அவரது மகள் செல்வி அளித்த புகாரின் பேரில்  சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயை அடித்து கொலை செய்த சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கௌதமி அவரது மச்சான் கௌதம் ஆகியோர் மீது கொலை வழக்கும், வேல்முருகன் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்த கீழ்குப்பம் போலீசார் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொது சொத்து மற்றும் பொது கடனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை தடியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | திருநங்கைகளுக்கு காட்டுக்குள் நடந்த கொடுமை! அதிரடி காட்டிய போலீஸ்! என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News