தாய் தந்தையை ஆத்திரம் தீர கழுத்தறுத்து கொன்ற மகன்... போலீசில் சிக்கியது எப்படி ?

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே தாய் தந்தையை பெற்ற மகனே கழுத்தறுத்து கொன்ற சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 23, 2022, 09:10 PM IST
  • தாய் தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
  • ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்
  • போலீசில் சிக்கியது எப்படி ?
தாய் தந்தையை ஆத்திரம் தீர கழுத்தறுத்து கொன்ற மகன்... போலீசில் சிக்கியது எப்படி ? title=

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே உள்ளது நாவளியங்காடு கிராமம். பட்டப்பகலில் நடந்தேறிய படுங்கர சம்பவத்தால் ஊரே மயானமாய் கிடந்தது. ஊருக்கு தெற்கே இருக்கும் தெருவில் வசித்துவந்த ரங்கசாமி என்பவரின் வீட்டில் போலீசார் குவிந்து கிடந்தனர். திறந்து கிடந்த வீட்டிற்கு உள்ளே தடயவியல் வல்லுநர்களும், கைரேகை நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஆம் கொலை.... இதே வீட்டில் வாழ்ந்து வந்த ரங்கசாமி மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கிடைத்த தடையங்களை சேகரித்துக்கொண்ட போலீசார் இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

Mandaiyur

சம்பவம் நடந்த நேரம் சரியாக மாலை 6 மணி இருக்குமென்றும் வழக்கமாக அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் ஆடு மேய்க்கச் சென்றுவிடுவார்கள் என்றும் தெரியவந்தது. அப்படி இருக்க அன்று மட்டும் எப்படி வீட்டில் இருந்திருப்பார்கள் என்ற சந்தேகம் போலீசாரை புருவம் உயர்த்த வைத்தது. அப்போதுதான் ரங்கசாமி வள்ளியின் மூத்த மகனான பாலு மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. பாலுதான் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதே பாலுதான் அன்று பெற்றோருக்கு பதிலாக ஆடு மேய்க்க சென்றிருக்கிறார். இந்நிலையில், அவரை பிடித்து விசாரித்ததில் போலீசார் மிரண்டு போயிருக்கிறார்கள். 

Mandaiyur Murder

27 வயது மதிக்கத்தக்க பாலு வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் ஊருக்கு திரும்பியவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அதில் அக்கம்பக்கத்து இளைஞர்களின் சகவாசமும் அதிகரித்துப் போனது. இதனால் தந்தை ரங்கசாமிக்கும் மகன் பாலுவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதில் தாய் வள்ளியும் பாலுவை கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பாலுவிற்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்தவர் விபரீத முடிவை கையில் எடுத்திருக்கிறார்.

CRIME

மேலும் படிக்க | திருப்பூர் : பெற்ற தந்தையை மகனே கொலை செய்த கொடூரம்..!

வீட்டிலிருந்த அரிவாளை கையில் எடுத்தவர் தாய் தந்தையை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்திருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ரங்கசாமி, வள்ளி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பாலுவை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். திருமணம் செய்து வைக்காததால் பெற்றோரை ஆத்திரத்தில் போட்டுதள்ளியதாக பாலு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆத்திரம் ஒருவரை அழித்துவிடும் என்பார்கள் ஆனால் அதே ஆத்திரத்தால் பெற்றெடுத்தவர்களை இங்கொருவர் அழித்தது.... பெரும் அதிர்ச்சி...

மேலும் படிக்க | போதை வெறியில் பெற்ற தாயை கொலை செய்த மகன் - இதுதான் காரணம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News