எஸ்.பி.வேலுமணியின் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!!

நேற்று முடிவடைந்த சோதனை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. கோவை பீளமேட்டில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கே.சி.பி நிறுவனத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2021, 11:28 AM IST
எஸ்.பி.வேலுமணியின் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!!  title=

அ.தி.மு.க-வின் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 12 மணி நேரமாக அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் எஸ்.பி வேலுமணியின் (SP Velumani) உறவினர்கள் வீடு , அவருடைய சகோதரர்கள் வீடு , அதிகாரிகள் வீடு அமைந்துள்ள சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம் என்று அவருக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவர் சென்னை மாநாகரட்சி ஒப்பந்தங்களில் ரூபாய் 464 கோடியும் , கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களில் ரூபாய் 364 கோடியும் முறைகேடு செய்துள்ளதாக அவர் மீதும் அவருக்கு நெருக்கமான 17 நபர்கள் மீதும்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு (FIR) செய்தனர்.

இந்நிலையில் நேற்று முடிவடைந்த சோதனை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. கோவை பீளமேட்டில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கே.சி.பி நிறுவனத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.  

ALSO READ: எஸ்.பி. வேலுமணி மீது பதிவான வழக்குகளின் முழு விவரம் இங்கே

மூன்று தளங்களை கொண்ட கே.சி.பி அலுவலகத்தில் நேற்று 2 தளங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் மீதமுள்ள 1 அறையில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலுமணியின் சகோதரர் அன்பரசன், கேசிபி இன்ஜினியர்ஸ் லிமிட்டெட், சந்திரபிரகாஷ், சந்திரசேகர், ஜெசு ராபர்ட் ராஜா, தி ஏஸ் டெக் மெஷினரி காம்போன்ண்ட்ஸ் இந்தியா, கன்ஸ்ட்ரக்ஸன் இன்ஃப்ரா லிமிட்டெட், கன்ஸ்ட்ரோமால் குட் லிமிட்டெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் ஃபவுண்டேசன்ஸ், வல்துர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்‌ஷ்மி ஹோட்டல், ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ், ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா, கேயூ ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரை எஸ்.பி.வேலுமணி கோவை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டராக இருந்த நிலையில் அப்போது உறவினருடன் சேர்ந்து தனது சொந்த நிறுவனத்தை துவங்கி கோவை மாநகராட்சி டென்டர்களை வாங்கிவந்துள்ளார். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார், ஆனால் அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவரது சகோதரர் அன்பரசன் நடத்தி வந்ததாக FIR கூறுகிறது.

ALSO READ: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News