பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூடியது தமிழக சட்டப்பேரவை..!

சட்டமன்ற அமர்வு முந்தைய அமர்வை விட பரபரப்பாகவும், காரசாரமான விவாதங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2021, 11:44 AM IST
  • தமிழக சட்டமன்றம் இன்று காலை 11 மணிக்கு ஒமந்தூர் அரசு எஸ்டேட்டில் உள்ள உள்ள கலைவானர் அரங்கத்தில் கூடியது.
  • சட்டமன்ற அமர்வு முந்தைய அமர்வை விட பரபரப்பாகவும், காரசாரமான விவாதங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • தேர்தல் பரப்புரைகளின் எதிரொலி சட்டமன்ற அமர்விலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூடியது தமிழக சட்டப்பேரவை..!  title=

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று காலை 11 மணிக்கு ஒமந்தூர் அரசு எஸ்டேட்டில் உள்ள உள்ள கலைவானர் அரங்கத்தில் கூடியது.

சட்டமன்ற சபாநாயகர் பி தனபால் திங்களன்று ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்தார்.

ஆண்டின் முதல் அமர்வு சபையில், வழக்கமான ஆளுநரின் உரையுடன் தொடங்கும். மேலும் சபையின் ஆலோசனைக் குழு பின்னர் அமர்வின் கால அளவை தீர்மானிக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல நூற்றாண்டுகள் பழமையான செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள சட்டமன்ற (Assembly) மண்டபம் சட்டசபையைக் கூட்ட பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. ஆகையால் கடந்த ஆண்டு செப்டம்பரில் சட்டசபை அரசாங்க ஆடிட்டோரியத்தில் கூடியது. இந்த ஆண்டு அமர்வும் அதே இடத்தில் நடைபெறும்.

செப்டம்பர் அமர்வுக்குப் பிறகு, தலைவர்கள் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை மற்றும் ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் மற்றும் பி சுப்பாராயண் ஆகியோரின் உருவப்படங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அறிவித்திருந்தார்.

ALSO READ: பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: PMK

இந்த உருவப்படங்கள் இன்று சட்டமன்றத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமர்வு தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கு (TN Assembly Elections) சில மாதங்கள் முன்னதாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தல்கள் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற அமர்வு முந்தைய அமர்வை விட பரபரப்பாகவும், காரசாரமான விவாதங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பிரதான எதிர்க்கட்சியான திமுக (DMK) தனது தெர்தல் பரப்புரையில் அஇஅதிமுக அரசாங்கத்தின் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை திமுக முன்னெடுத்து வைத்துள்ளது. ஆளும் அஇஅதிமுக-வும் இதற்கு சரியான பதில்களை அளித்து வருவதோடு, திமுக-வை குறிவைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தேர்தல் பரப்புரைகளின் எதிரொலி சட்டமன்ற அமர்விலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ALSO READ: Union Budget 2021: தமிழ்நாடு உட்பட தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பரிசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News