Sterlite நிர்வாக பணிகளுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு!

Sterlite ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2018, 05:40 PM IST
Sterlite நிர்வாக பணிகளுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு! title=

Sterlite ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது!

தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள் Sterlite ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த 9-ஆம் தேதி Sterlite ஆலையின் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.

மேலும் Sterlite ஆலையினால் மட்டும்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது என தமிழக அரசால் உறுதியாக கூறமுடியுமா?, Sterlite ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு படுகிறது என தமிழக அரசால் உறுதியாக கூறமுடியுமா என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. 

இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடி பதில் அளிக்காத நிலையில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இதனையடுத்து நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு குறித்து தலைமைச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக்கு பிறகு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது!

Trending News