கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர முடியாது -தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2018, 08:17 PM IST
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர முடியாது -தமிழக அரசு title=

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடம் ஒதுக்க முடியாது எனவும், பல சட்ட சிக்கல்கள் உள்ளது. காமராஜ் நினைவகம் அருகே 2 ஏக்கர் நிலம ஒதுக்கப்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Trending News