தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி

Last Updated : Apr 23, 2017, 12:16 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி title=

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி பலியாகினர். 
தஞ்சாவூரை அடுத்த ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். பணியை முடித்து விட்டு சென்ற வினோத் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்று போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் வினோத் மீது மோதி மரணம் அடைந்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த எழும்பூர் ரயில்வே போலீசார் வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Trending News