கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து அறிந்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 4, 2018, 01:00 PM IST
கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு! title=

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து அறிந்தார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.

இதை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று உடல்நலம் குறித்து கேட்றிந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, மு.க.ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நேரில் விசாரித்து அறிந்தார்.

Trending News