சாம்பாரில் விஷம் கலந்து மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்! ஒன்றரை வருடம் கழித்து பிடிபட்ட சம்பவம்!

விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : May 25, 2023, 12:47 PM IST
சாம்பாரில் விஷம் கலந்து மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்! ஒன்றரை வருடம் கழித்து பிடிபட்ட சம்பவம்! title=

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர்  விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி  பூமாலை என்பவரின் மகள் கீதா  என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சரவண கிருஷ்ணன் மற்றும் பிரியதர்ஷினி என குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புது குப்பம் பகுதியை சேர்ந்த  ஹரிஹரன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது பற்றி,  கீதாவின் மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியனுக்கு தெரிய வந்ததால் அவர்கள் மருமகள் கீதாவை கண்டித்துள்ளனர். அதோடு கீதாவை கண்காணித்தும் வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேது தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூருக்கு சென்று, தனது குழந்தைகள், மாமியார் கொளஞ்சி,  மாமனார் சுப்பிரமணியன் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட் விஷத்தினை கலந்து கொடுத்துள்ளார். அன்று துரதிஷ்டவசமாக பக்கத்து வீட்டு சிறுவனும் அந்த சாம்பாரை சாப்பிட்டுள்ளான்.

அப்போது விஷ சாம்பாரை சாப்பிட்ட மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியன், கீதாவின் குழந்தைகள்,  பக்கத்து வீட்டு சிறுவன் நித்தீஸ்வரன் ஆகியோருக்கு அடுத்தடுத்து உடல் நலவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன், கொளஞ்சி, நித்தீஸ்வரன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இதில் சிறுவர்கள் சரவண கிருஷ்ணன் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மட்டுமே அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். 

மேலும் படிக்க | கடனை அடைக்க 4 வயது மகளை அடமானம் வைத்த குடிகார தந்தை!

இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி, கீதாவின் கணவர் வேல்முருகன், மங்களம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் வழக்கு பதிந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றரை வருடம் கழித்து, சாம்பாரில் விஷம் வைக்கப்பட்டது தெரியவந்தது.  இதனையடுத்து  மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டு பையனை கொன்ற கீதா மற்றும் அவரது காதலன் ஹரிஹரனை நேற்று காலை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் உட்பட மூன்று நபரை, விஷம் வைத்துக் கொன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகளை ஒன்றரை வருடம் கழித்து கைது செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகாத உறவால் ஒன்றும் அறியாத பக்கத்து வீட்டு சிறுவனும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மாணவி ஒருவரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ஷிவ் நாடார் பல்கலைகழக மாணவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News