ஏலகிரி மலையில் விரைவில் சாகச சுற்றுலா தளம்!

தமிழகத்தில் சுற்றுலா துறை வரலாற்றிலேயே முதல்முறையாக ஏலகிரி மலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தளம்.

Written by - RK Spark | Last Updated : Nov 30, 2022, 10:24 AM IST
  • ஏலகிரியில் சாகச சுற்றுலா தளம்
  • விரைவில் பணிகள் முடிக்கப்படும்
  • சுற்றுலா துறை அமைச்சர் தகவல்
ஏலகிரி மலையில் விரைவில் சாகச சுற்றுலா தளம்! title=

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலா தளத்தில் படகு இல்லம் மற்றும் இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலா தளத்திற்கு வந்திருந்த ஆந்திரா மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள நபர்களிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள மலைப்பாதைக்கு நடந்தே ஏறிச்சென்று அத்தனாவூரில் ரூ மூன்று கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்க பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க | 'தமிழ்நாட்டில் ராணுவ வீரரையே மிரட்டுகின்றனர்...' - சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை

பின்னர் செய்தியாளரை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தமிழகத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சுற்றுலா துறை வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழக முதல்வர் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏலகிரியை கண்டறிந்து அதிக அளவில் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சாகச சுற்றுலா தளம் அமைய சாத்திய கூறுகள் இருந்த நிலையில் அதற்காக தேர்வு செய்யப்பட்டு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்பட்டது.இதில் சாகச விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி பெறலாம், தற்பொழுது பூமி பூஜை போடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சுற்றுலா தளத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருவண்ணாமலை ஜவ்வாதுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலைக்கும், ராமேஸ்வரத்தில் பரப்பனசெய், இது இல்லாம்மள் கன்னியாகுமாரி சித்தாறு, தென்காசி குண்டாறு அணை, சென்னையில் குளவா ஏரி பூண்டி ஏரி உள்ளிட்ட பல இடங்களில் படகு குளங்களை அமைக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | இலங்கையில் 23 தமிழ் மீனவர்கள்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News