முன்னாள் காதலியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு செக் வைத்த போலீஸ்..!

சென்னை மாதவரத்தில் இளம்பெண்னை ஆபாசமாக படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 3, 2022, 08:25 PM IST
  • முன்னாள் காதலனை நம்பி சென்ற இளம்பெண்
  • மொபைலில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்
  • போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை
முன்னாள் காதலியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு செக் வைத்த போலீஸ்..! title=

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும், புழல் காவங்கரை பகுதியை சேர்ந்த சாம்சன் ராஜ் என்ற வாலிபரும் மாதவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒன்றாக படித்தனர். அப்போது இளம்பெண்ணுக்கு 16 வயதே ஆகி இருந்தது. பள்ளிப் பருவத்தில் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சாம்சன் ராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு மாதவரத்தில் தான் படித்த பள்ளி அருகே வைத்து காதலியை சாம்சன் ராஜ் சந்தித்துள்ளார்.அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த சாம்சன் ராஜ், மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆள் இல்லாத ஒரு வீட்டுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் எல்லை மீறியிருக்கிறார்.

அதை தனது மொபைலில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு காதலியான இளம்பெண்ணுக்கும் திருமணமானது. திருமணத்துக்கு பிறகு காதலியை போனில் அழைத்து பேசிய சாம்சன் ராஜ்,  உனது ஆபாச படம் மற்றும் வீடியோ என்னிடம் உள்ளது. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலி, சாம்சன் ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தனது வீட்டில் வைத்தே மிரட்டி காதலியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதன் பின்னர் பலமுறை சாம்சன்ராஜ், போனில் தொடர்பு கொண்டு பேசி, தான் கூப்பிடும் போதெல்லாம் தனியாக வரவேண்டும் என்றும், அப்படி வரவில்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் காதலனின் தொல்லை எல்லை மீறிச் சென்றதால் புழல் மகளிர் காவல் நிலையத்தில்  இளம்பெண் புகார் அளித்தார்.  இதன் பேரில் போலீசார் சாம்சன் ராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சாம்சன்ராஜை கைது செய்தனர். 

மேலும் படிக்க | ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News