ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த பட்டதாரி வாலிபர் சுரேஷ் தற்கொலை...

தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க  தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 07:11 PM IST
  • ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
  • சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தெரிகிறது.
  • ரம்மியால் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த பட்டதாரி வாலிபர் சுரேஷ் தற்கொலை... title=

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் B.COM படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு  செல்வதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

இந்நிலையில் சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தெரிகிறது. மனமுடைந்த சுரேஷ் வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம் நன்பர்களிடம் பணம் வாங்கிய முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன். மேலும் ஆன்லைன் ரம்மியில் மீளமுடியவில்லை எனவும்  Bye Bye Miss U ரம்மி  என கடிதம்  வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | உண்மை காதலை நிரூபிக்க தன்பெயரை மார்பில் பச்சை குத்த சொல்லி காதலியை கட்டாயப்படுத்திய இளைஞன் கைது

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்த சுரேஷின் தந்தை விஸ்வநாதன் கூறுகையில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது அதன் அடிப்படையில் தற்போது என்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால்  பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க  தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க | மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது; சாவிலும் இணைபிரியா தம்பதியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News