வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி

அப்பாவி மக்களை ஏமாற்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மோசடியாளர்கள் பயன்படுத்துகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2022, 05:53 PM IST
  • வாட்ஸ்அப் பேமெண்டில் நூதன மோசடி
  • QR கோட் ஸ்கேனர் மூலம் பணம் திருட்டு
  • விழிப்பாக மக்கள் இருக்க அறிவுறுத்தல்
வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி title=

ஆன்லைன் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பங்கள் வளர, வளர அதனை வைத்து மோசடி செய்வது எப்படி? என்பதையும் மோசடியாளர்கள் கண்டுடிபிடிக்கின்றனர். குறிப்பாக அப்பாவி மக்களை முட்டாளாக்கும் நோக்கில் இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. அதிகரித்து வரும் யுபிஐ பேமெண்ட் சிஸ்டமே மோசடியாளர்களின் தற்போதைய குறியாக உள்ளது. 

மேலும் படிக்க | கரண்ட் இல்லாதபோது சார்ஜ் செய்வது எப்படி? ஸ்மார்டா யோசிக்கவும்

QR ஸ்கேன் மூலம் குறியீட்டை ஸ்கேன் செய்து குறிப்பிட்ட தொகையை செலுத்துவதை விட,  WhatsApp பேமெண்ட் மூலம்  பணத்தை அனுப்புவது இன்னும் சிறந்தது. இது பரவலான மக்கள் பயன்படுத்தும் பொதுவான பேமெண்ட் சிஸ்டம் என்பதால் இதன் மூலம் மோசடியை அரங்கேற்ற மோசடியாளர்கள் தயாரக இருக்கின்றனர். வாட்ஸ்அப் பேமெண்ட் மூலம் ஏற்கனவே மோசடிகள் அரங்கேறி இருப்பதற்கான புகார்களும் பதிவாகியுள்ளன. 

மோசடி எப்படி அரங்கேற்றுகிறார்கள் என்றால், பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களிடம் வாடிக்கையாளர்கள்போல் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். வாங்க விரும்புவதாக கூறும் பொருட்களின் விவரங்களை சேகரித்துக் கொள்ளும் அவர்கள், பணத்தை செலுத்த தயாராக இருப்பதாக கூறி உங்களுடன் QR குறியீட்டை பகிர்ந்து கொள்வார்கள். அதனை உங்களின் கூகுள் பே மற்றும் யுபிஐ ஐடி மூலம் ஸ்கேன் செய்ய கூறுவார்கள். 

மேலும் படிக்க | Flipkart வழங்கும் அசத்தல் சலுகை; 32 Inch ஸ்மார்ட் டிவிக்களுக்கு அதிரடி தள்ளுபடி

அவ்வாறு செய்யும்போது, வழக்கத்துக்கு மாறாக சில அடிப்படை தகவல்களையும் அதில் பதிவிடச் சொல்லி வற்புறுத்துவார்கள். அப்போது, அவர்கள் கேட்கும் தகவல்களை பகிர்ந்து கொண்டால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள். யார் ஒருவருக்கு பணம் அனுப்பும்போது அல்லது பெறும்போது ஒருமுறைக்கு இருமுறை தகவல்களை சரிபார்த்த பின்னர்பணத்தை அனுப்புங்கள். பணத்தை பெறுகிறீர்கள் என்றால், வழக்கமான நடைமுறைக்கு மாறாக கூடுதல் தகவல்களை பதிவிடக்கோரி வற்புறுத்தினால் அதனை செய்ய மறுத்துவிடுங்கள். கனிவாக பேசி உங்களை மயக்கி, இந்த மோசடியை அரங்கேற்றுவார்கள். ஏமாந்து இருந்தீர்கள் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் காலியாகிவிடும். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News