PSLV-47 ராக்கெட் 25 ஆம் தேதிக்கு பதில் வரும் 27 ஆம் தேதி ஏவப்படும்: ISRO

பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் 25 ஆம் தேதிக்கு பதில் வரும் 27 ஆம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது!! 

Last Updated : Nov 21, 2019, 03:00 PM IST
PSLV-47 ராக்கெட் 25 ஆம் தேதிக்கு பதில் வரும் 27 ஆம் தேதி ஏவப்படும்: ISRO  title=

பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் 25 ஆம் தேதிக்கு பதில் வரும் 27 ஆம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது!! 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் வரும் 25 ஆம் தேதி காலை 9.28 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதனுடன் சேர்த்து அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட இருந்தன.

இந்த நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 25 ஆம் தேதிக்கு பதிலாக வருகிற 27 ஆம் தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ்.எல். வகையில் 21-வது ராக்கெட் ஆகும். சதீஷ்சவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது.

509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ள கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது. மேலும், எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது. 

 

Trending News