ஆர்கேநகர் தொகுதியில் பல பகுதிகளில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றது. 2000 ரூபாய் கட்டாக வைத்து கொண்டு வீடுவீடாக பணம் கொடுத்தனர்.
அப்போது பணப்பட்டுவாடா நடந்த இடங்களில் திமுகவினர் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் திமுக வினர் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் திமுகவினரை சந்தித்து ஆறுதல் கூறினார். நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக் கொண்டார்.
என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு என தீபா தெரிவித்துள்ளார்.
ஆர்கேநகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா, தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக யாருடைய கையில் சிக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களே இன்று கட்சியை நடத்தி வருகின்றனர். சில காலம் அவர்களோடு இருந்தவர்களும் இன்று ஓட்டு கேட்டு வருகிறார்கள் என ஓ பன்னீர்செல்வம் அணியினரையும் அவர் சாடினார். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வருவேன் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆர்கேநகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி, ஓபிஸ் அணி, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சியும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை போன்றவை இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக உடைந்து 3 பிரிவுகளாக போட்டியிடுகிறது. திமுக, பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இரட்டை விளக்கில் எம்ஜிஆர் ஒன்று மற்றொரு ஜெயலலிதா என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் மதுசூதனனுக்கு வெற்றியை பெற்றுத் தருவர் என்று ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்கேநகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணியாக போட்டி இடுகின்றனர்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அதிமுகவின் இரு அணிகளும் சின்னத்தை பிரபலப்படுத்த போராடி வருகின்றனர். இந்நிலையில் தண்டையார்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகத்தை ஓ.பன்னீர் செல்வம் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர்:-
ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்தது. இந்நிலையில் ஆர்கேநகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஆர்கேநகர் சட்டசபை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கியது.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்கேநகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.