என்னை கைது பண்ணிடாதீங்க அலறி துடிக்கும் ஐஸ்வர்யா! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!

Karthigai Deepam Latest Episode: தீபாவுடன் வந்த கார்த்திக்.‌. அதிர்ந்து போன ஐஸ்வர்யா, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 20, 2024, 11:31 AM IST
  • தீபாவுடன் வந்த கார்த்திக்.‌..
  • அதிர்ந்து போன ஐஸ்வர்யா, நடந்தது என்ன?
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
என்னை கைது பண்ணிடாதீங்க அலறி துடிக்கும் ஐஸ்வர்யா! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் போலீஸ் உடன் தீபாவை தேடிக் கொண்டிருக்கிற ஒரு ஜூஸ் கடைக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது போலீஸ் கூடிய சீக்கிரம் தீபாவை கண்டுபிடிக்கணும். தீபாவும் கீதாவும் ஒரே உருவத்தில் இருப்பது பெரிய சிக்கல், துங்காவும் கீதாவை தீவிரமாக தேடிக்கிட்டு இருக்கான் என்று சொல்கிறார். கார்த்திக் கீதா என்னை நம்பி வந்திருக்காங்க அவங்களையும் காப்பாற்றணும் என்று சொல்கிறான். 

அதன் பிறகு சக்தியை எஃப்எம் ரேடியோவிற்கு ஃபோன் போட்டு ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரிக்க மேனேஜர் இன்னும் எதுவும் கிடைக்கல கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் என்று சொல்லி போனை வைக்கிறார். அதன் பிறகு கார்த்திக், போலீஸ் ரெஸ்டாரன்டில் இருந்து கிளம்ப நர்ஸ் சக்தி அதை பார்த்து விடுகிறாள். 

மேலும் படிக்க | கீதா கிடைச்சிட்டா அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம்! பிளான் பண்ணும் துங்கா! கார்த்திகை தீபம் எபிசோட்

இவர்களை பின் தொடர்ந்து ஓடி வர கார்த்திக் கவனிக்காமல் கிளம்பி வந்து விடுகிறான். திடீரென யாரோ உன் தொடர்ந்து வந்தது போல உனக்கு திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லாததால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகிறது. 

மறுபக்கம் அபிராமி வீட்டில் வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா வீட்டில் இருப்பது தீபா கிடையாது கீதா என்ற உண்மையை போட்டு உடைக்க, கீதாவும் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதன் நேரத்தில் கார்த்திக் தீபாவுடன் வீட்டுக்குள் நுழைய தீபா, ஐஸ்வர்யா தான் தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டது என்ற உண்மையை உடைக்க அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர். 

ஐஸ்வர்யா என்னை கைது பண்ணிடாதீங்க என்று அலறி துடிக்க அது அவளது கனவு என்று தெரிய வருகிறது. அருண் என்ன ஆச்சு என்ன உளறிட்டு இருக்க என்று கேட்க அவனை சமாளிக்கிறாள். 

அதைத்தொடர்ந்து எஃப்.எம்-ல் தீபா குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க - ரசிகர்களை கவர்ந்த தலைவெட்டியான் பாளையம்! வித்தியாசமான ப்ரமோஷன் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News