டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டதை அடுத்து, டெல்லி போலீஸ்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்,
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் டெல்லியில் திருடப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரத்தில், அதுவும் தலைமை செயலகத்திற்கு அருகில் முதல்-அமைச்சரின் கார் திருடப்பட்டுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 60_வது நாளாக போராடி வருகின்றனர்.
குர்கிராம் மாவட்டத்தி ரியான் சர்வதேச பள்ளியில் 2-வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள தாகூர் ஃபப்ளிக் பள்ளியில் படிக்கும் 5-வயது பெண்ணை அந்த பள்ளியின் பியூன் விகாஸ் கற்பழித்து உள்ளான்.
வீட்டிற்கு திரும்பிய குழந்தை பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது.இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி விகாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புது டெல்லி ரயில் நிலையத்தில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த ரயில் புது டெல்லி ரயில் நிலையத்தில் 5-வது தடத்திற்கு சுமார் 2 மணிக்கு வந்தது. அப்பொழுது பயணிகள் அனைவரும் இரங்கி சென்றனர். அதன் பிறகு 3.57 மணிக்கு ரயில் சுத்தம் செய்வதற்காக இயக்கப்பட்டது. அப்பொழுது ரயில் என்ஜினின் கடைசி சக்கரம் தடம் புரண்டது. ஆனால் காயம் யாருக்கும் ஏற்படவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதமாக நடைபெற்றது.
அதன்பிறகு தமிழகம் திரும்பிய விவசாயிகள், சில நாட்கள் கழித்து மீண்டும் டெல்லி ஜன்தர்-மன்தர் பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் கட்ட போராட்டத்தை தொடக்கி இன்றுடன் 56_வது நாளாக போராடி வருகின்றனர்.
கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 70 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்ததை அடுத்து. இன்று (சனிக்கிழமை) டெல்லி தேசிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் இளங்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இது குறித்து குடும்பத்தார் கூறுகையில், அக்குழந்தை திங்களன்று ராவ் துலா ராம் மருத்துவமனையில் பிறந்துள்ளது. திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஆக்ஸிஜனை வழங்க மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளார், ஆனால் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் புதுடில்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்த பாராதிய ஜனதா கட்சி.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
எனவே புதிய ஜனாதிபதியை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பாஜக விரும்பியது. ஆனால் பாஜக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லியில் உள்ள என்டிடிவி துணை நிறுவனர் மற்றும் நிர்வாக துணை தலைவர் பிரணாய் ராய் வீட்டில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் அந்த பகுதியில் ஏரளாமான பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரனாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் அவர்களது வீடு உட்பட 4 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அவரது வீடு அமைந்துள்ளது.
தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் கடந்த 41வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்துள்ளார்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 41வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை முதல்வர் பழனிச்சாமி பெற்றார். நதிகள் இணைப்பு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமரை வலியுறுத்தினேன்.
கடந்த சில தினங்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினர். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:-
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதராவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த 33 நாள்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்க தி.மு.க இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.
போராட்டத்தின் போது சீமான் கூறியது:-
தமிழக விவசாயிகள் 32வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண் வேடமிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் போதிய பருவமழை இன்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராடி வருகின்றனர்.
29-வது நாளான இன்று விவசாயிகள் மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடந்தினார்கள். அவர்கள் மண் சோறு சாப்பிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
டெல்லியில் 28வது நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று பிரதமர் அலுவலகம் முன்பு திடீரென நிர்வாணமாக போராடினர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் பாடை கட்டி போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் போதிய பருவமழை இன்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.