விமானத்தில் ரகளை செய்த பயணி... குடிபோதையில் விமான பணிபெண்ணிற்கு முத்தமிட்ட 61 வயது நபர்!

விமான பயணத்தின் போது, குடிபோதையில் 61 வயது முதியவர் ஆண் விமான உதவியாளரை முத்தமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 22, 2023, 07:23 PM IST
  • விமானி விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு சம்பவம் குறித்து புகாரளித்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
  • விமானத்தில் ஏற்பட்ட ரகளை.
  • விமான பணிப்பெண்ணை முத்தமிட்டதையோ அல்லது போதையில் இருந்ததையோ மறுத்தார்.
விமானத்தில் ரகளை செய்த பயணி... குடிபோதையில் விமான பணிபெண்ணிற்கு முத்தமிட்ட 61 வயது நபர்!  title=

கடந்த சில மாதங்களாகவே,  சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்டா ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் தனது பயணத்தின் போது அதிகமாக குடித்துவிட்டு விமான பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலாஸ்காவிற்கு விமானத்தில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர், விமானத்தில் இருந்த கேபின் குழு உறுப்பினர்களில் ஒருவரை வலுக்கட்டாயமாக தாக்க முயன்றதாகவும் நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

விமான பணிப் பெண்ணிடம் வலுக்காயமாக அதிக அளவில் மது வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பணி பெண்ணிடம் தகராறு செய்து, அந்த நபர், கேப்டனுக்காக சாப்பாடு இருந்த தட்டையும் உடைத்தார். சம்பவத்தில் விமானத்தில் பயணித்த பயணி டேவிட் அலன் பர்க் (61) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது இறந்த நண்பரின் சொத்தினை விற்பது தொடர்பாக மின்னசோட்டாவிலிருந்து அலாஸ்காவிற்கு பயணம் செய்தார்.

டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் முதல் வகுப்பு பயணியாக, மினியாபோலிஸிலிருந்து புறப்படுவதற்கு முன்பே பர்க் குடித்திருந்ததாக கூறப்பட்டது. இருப்பினும், விமானத்தில் அவருக்கு மதுபானம் உடனே வழங்கப்படவில்லை என தகராறு செய்ய ஆரம்பித்தார்.

மேலும் படிக்க | விமான கண்ணாடியில் விரிசல்.. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

விமானம் பறந்துகொண்டிருந்தபோது, பர்க் தனக்கு மது வழங்கிய விமானப் பணிப்பெண்ணின் அருகில் சென்று முத்தம் கொடுக்க முயன்றார். அவர்  அவரிடம் இருந்து விலகி செல்ல முயற்சித்த நிலையில், பர்க் அவரது கழுத்தைப் பிடித்து, ழுத்து, அவரது கழுத்தில் முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தனது சக பயணிகளுக்கும் அவர் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார்.

விமானத்தில் ஏற்பட்ட ரகளையைத் தொடர்ந்து, விமானி விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு சம்பவம் குறித்து புகாரளித்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.  பர்க் தனது போலீஸ் விசாரணையின் போது உணவு தட்டை உடைத்ததையோ, விமான பணிப்பெண்ணை முத்தமிட்டதையோ அல்லது போதையில் இருந்ததையோ மறுத்தார். இருப்பினும், விமானத்திற்கு முன் மது அருந்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

முன்னதாக கடந்த நவம்பர் 26 அன்று, நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திலும் ஒரு அவமானகரமான சம்பவம் நடந்தது. ஏர் இந்தியா விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த சங்கர் மிஸ்ரா, என்ற நபர் குடிபோதையில் வயதான பெண் ஒருவர் சிறுநீர் கழித்தார். 

மேலும் படிக்க | Cheapest Flight Tickets: ரயில் டிக்கெட் விலையில் விமான டிக்கெட்டுகளை வாங்க வேண்டுமா...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News