இங்கிலாந்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை: அச்சத்தில் மக்கள்

பல நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 02:55 PM IST
  • உலக அளவில் மீண்டும் கொரோனா தொற்று புதிய வீரியத்துடன் பரவி வருகின்றது.
  • கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 2,18,724 பேர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,641,520 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை: அச்சத்தில் மக்கள் title=

லண்டன்: உலக அளவில் மீண்டும் கொரோனா தொற்று புதிய வீரியத்துடன் பரவி வருகின்றது. பல நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. இங்கிலாந்திலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 2,18,724 பேர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து, முதல் முறையாக தினசரி கோவிட் எண்ணிக்கை (Covid-19 Cases) 2,00,000-ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனுடன் இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,641,520 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொடர்பான 48 இறப்புகள் பதிவாகியுள்ளன. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 148,941 ஆக உள்ளது. 14,126 கோவிட்-19 நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.

ALSO READ | ஓமிக்ரானை ஓரங்கட்டி முன்னுக்கு வருகிறது புதிய IHU மாறுபாடு: பிரான்சில் 12 பேர் பாதிப்பு 

முன்னதாக, இங்கிலாந்து பிளான் பி இலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் தரவுகள் எதுவும் தற்போது இல்லை என்று செவ்வாயன்று இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் கூறியிருந்தார். ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது, பெரும்பாலான பொது உட்புற இடங்களில் முகக்கவசங்களை கட்டாயமாக்குவது ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். 

"அமெரிக்கா (America) செய்ததைப் போல, தனிமைப்படுத்தப்படும் காலத்தை ஏழு நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிடவில்லை," என்று அவர் கூறினார்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரிட்டனில் (Britain) 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். சுமார் 82 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளனர். 

ALSO READ | Coronavirus: அண்டார்டிகாவிலும் கொரோனா! விஞ்ஞானிகளுக்கு கோவிட் பாதிப்பு! இது ஒமிக்ரானா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News