மியான்மரில் பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமையும் முடக்கியது ராணுவம்

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம்  ஆகியவற்றையும் முடக்கியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2021, 12:10 AM IST
  • மியான்மரில் ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது.
  • ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
  • பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
மியான்மரில் பேஸ்புக்கை தொடர்ந்து  ட்விட்டர், இன்ஸ்டாகிராமையும் முடக்கியது ராணுவம் title=

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம்  நிராகரித்தது.

எனினும் மியான்மரின் (Myanmar) ராணுவத்திற்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.

நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக #HearTheVoiceofMyanmar, #RespectOurVotes, மற்றும் #SaveMyanmar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டானது. 

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம்  ஆகியவற்றையும் முடக்கியுள்ளது. 

முன்னதாக, பிப்ரவரி 7-ம் தேதி பேஸ்புக் தளத்தை முடக்க ராணுவ அரசு உத்தரவிட்டது  குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மறுஅறிவிப்பு வரும் வரையில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் சேவையும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மியான்மாரில் ஆங் சான் சூ கி-யை (Aung San Suu Kyi) விடுவிக்கக் கோரியும், தற்போதுள்ள அரசியல் பதட்ட நிலையை எதிர்த்தும் ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கினர். கலவரம் ஏற்படமால்  சேவை முடக்கப்பட்டது. வீதியில் இறங்கிய மக்கள் “இராணுவ சர்வாதிகாரி ஒழிக, ஜனநாயகம் வாழ்க” என கோஷம் எழுப்பினர். போராட்டக்காரர்களுக்கு வீதிகளில் மக்கள் உணவும் தண்ணீரும் அளித்து உதவினர்.

ALSO READ | விபத்தில் சிதைந்த முகம் கைகள்... முகம், கை மாற்று சிகிச்சை அளித்தது மறுவாழ்வு..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News