2671இல் இருந்து 2023க்கு வந்த டைம் டிராவலர்? - அடுக்கடுக்காக வெளியிடும் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

Eno Alaric Prediction: 2671ஆம் ஆண்டில் இருந்து நிகழ்காலத்திற்கு திரும்பியுள்ளதாக தன்னை தானே கூறிக்கொள்ளும் ஒரு நபர் அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 29, 2023, 03:35 PM IST
  • அவர் ஏலியன் படையெடுப்புகள் குறித்தும் கணித்துள்ளார்.
  • மூன்றாம் உலகப்போர் எப்போது நடக்கும் என அவர் கணித்துள்ளார்.
  • நடப்பாண்டில் நடக்கப்போவது குறித்து அவர் கணித்துள்ளார்.
2671இல் இருந்து 2023க்கு வந்த டைம் டிராவலர்? - அடுக்கடுக்காக வெளியிடும் அதிர்ச்சி தரும் தகவல்கள்! title=

Eno Alaric Prediction: எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கணிக்கும் சக்தி மனிதர்களாகிய நமக்கில்லை. ஆனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய மனிதன் மிகவும் ஆர்வமாக இருக்கிறான் என்பதுப நிதர்சனம். எதிர்காலத்தை எப்படி பார்ப்பது என்பது அறிவியலுக்கான நீண்டகால தேடலாகும். 

ஆனால், இதுவரை மனிதர்கள் எதிர்காலத்தை எட்டிபார்க்கும் இயந்திரம் எதுவும் தற்போது வரை உருவாக்கப்படவில்லை. ஆனால் இதற்கிடையில், 2671ஆம் ஆண்டிலிருந்து தான் பயணித்ததாகவும், எதிர்காலத்தில் பல பெரிய மாற்றங்களை இந்த பூமி கண்டிருப்பதாகவும் தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட டைம் டிராவலர் ஒருவர் கூறியுள்ளார். 

இது மட்டுமின்றி, மூன்றாம் உலகப்போர் எப்போது நடக்கும் என்பதையும் அந்த டைம் டிராவலர் விவரித்துள்ளார். தன்னை தானே டைம் டிராவலர் என சொல்லிக்கொள்ளும் அந்த நபர், எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதை இதில் காணலாம்.

யார் இந்த டைம் டிராவலர்?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒருவர் டைம் டிராவல் செய்ததாகக் கூறியிருந்தார். இந்த நபரின் பெயர் ஏனோ அலரிக் என கூறப்படுகிறது. 2671ஆம் ஆண்டில் தான் நிகழ்காலத்திற்கு (அதாவது 2023ஆம் ஆண்டுக்கு) திரும்பி வந்ததாக ஏனோ அலரிக் கூறுகிறார். அடுத்த 650 ஆண்டுகள் வரை பூமியில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி தனக்கு எல்லாம் தெரியும் என்று ஏனோ அலரிக் கூறினார். 

மேலும் படிக்க | உலகில் உள்ள தனியார் படைகள்! அரியணையையே கவிழ்க்கும் சக்தி படைத்த 'தனியார் ராணுவங்கள்'

ஏனோ அலரிக் சொல்வது என்ன?

உலகத்தில் எப்போது என்ன நடக்கும் என்று தனக்கு எல்லாம் தெரியும் என்று ஏனோ அலரிக் கூறினார். 3ஆம் உலகப் போர் உலகில் எப்போது நடக்கும் என்று தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், மூன்றாம் உலகப் போர் எப்போது நடக்கும் என்று சரிபார்ப்பதற்கு யாருமில்லை. ஆனால் ஏனோ அலரிக் அதைப் பற்றி தனது சொந்த உரிமைகோரலைக் கூறுகிறார்.

மூன்றாம் உலகப் போர் எப்போது?

ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போருக்கு சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று அவர் கூறினார். மூன்றாம் உலகப் போரைத் தவிர, பூமியில் ஏலியன் தாக்குதலின் ஆபத்தும் உள்ளது என்பதை அவர் கூறுகிறார். ஏனோ அலரிக் பூமியைத் தவிர மற்ற கிரகங்களைப் பற்றிய கணிப்புகளையும் தெரிவித்துள்ளார். 

சில காலத்திற்கு முன், ஏனோ அலரிக் 2023 ஆம் ஆண்டில் யாராலும் கணிக்க முடியாத அசாதாரணமான ஒன்று நடக்கும் என்று கூறியிருந்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் என கூறியிருந்தார். பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் எதிர்காலம் குறித்த கருத்துகளை தெரிவித்து வரும் ஏனோ அலரிக் நடப்பு ஆண்டிற்கும் பல திடுக்கிடும் கணிப்பை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 2023ம் ஆண்டின் ‘அந்த’ 6 நாட்கள்... ஆச்சர்யத்திலும் நடுக்கத்திலும் உலகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News