இலங்கை அதிபர் மரணம் அடைவார் என கூறிய ஜோதிடர் கைது

Last Updated : Feb 2, 2017, 10:18 AM IST
இலங்கை அதிபர் மரணம் அடைவார் என கூறிய ஜோதிடர் கைது title=

இலங்கை அதிபர்  மைத்ரிபால சிறிசேனா ஜனவரி 26-ம் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கை ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் தெரிவித்து இருந்தார். 

இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேன விரைவில் இறந்துவிடுவார் என்பதை அந்த ஜோதிடர் பேசி, வீடியோவாக பதிவு செய்து, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக, இலங்கை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சக செயலாளர் நிமல் போபகே போலீசில் புகார் செய்தார். 

இதையடுத்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மக்களை திசைதிருப்ப முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி, ராணுவ அணிவகுப்பை பார்வையிடும் போது அவரை தாக்க முயன்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர் இந்த விஜித ரொஹானா என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News