அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் கடும் பெருளாதார நெருக்கடி நிலவும் இந்நிலையில் ஆத்திரமடைந்த கும்பல் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2022, 02:13 PM IST
அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய  கோத்தபய ராஜபக்சே title=

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுவதால், வாழ வழியின்றுஇ மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராடத்தை தொடங்கினர். நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்தனர்.

மக்களின் தொடர் போராட்டம் வன்முறையாக மாறி, பிரதமர் இல்லம் தீகிரையாக்கப்பட்டது. வேறு வழியின்றி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். பின்னர் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் மக்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீள முடியாமல் மக்கள், அன்றாட உணவு தேவைகளை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகை மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டு பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலத்தில் பங்கேற்க பொதுமக்கள் குவிந்து வருவதால அங்கே போலீஸார் குவிக்கப்பட்டு பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்ஸ் மூலம், அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபய ராஜபக்ஷ, சனிக்கிழமையன்று தலைநகரில் உள்ள தனது அதிகாரபூர்வ  இல்லத்திலிருந்து தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தியுள்ளது. ராஜினாமா செய்ய கோரி வளாகத்தை முற்றுகையிட்டனர். ஜனாதிபதி "பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்றும், ஆத்திரமடைந்த மக்கள் கும்பல் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதைத் தடுக்க துருப்புக்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதிபர் மாளைகையை சேர்ந்த நபர் கூறினார்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News