Joe Biden: கார் சேஸ்மேன் மகன் வெள்ளை மாளிகை வேந்தன் ஆன கதை...!!!

ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன்,  உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல...  மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2020, 02:29 PM IST
  • ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன், உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல... மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்.
  • தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தருக்கு, வருத்தமளிக்கும் சம்பவங்களும் நேர்ந்தன.
  • மருத்துவமனை அறையிலிருந்து தான், முதல் செனட் பதவிக்காலத்திற்கும் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
Joe Biden: கார் சேஸ்மேன் மகன் வெள்ளை மாளிகை வேந்தன் ஆன கதை...!!! title=

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பிடன் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளது.   ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன்,  உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல...  மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்

ஜோ பிடன் (Joe Biden) நவம்பர் 20, 1942 அன்று பென்சில்வேனியாவின் ஸ்க்ராண்டனில் ஒரு ஐரிஷ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு 10 வயதாக இருந்தபோது, ​​அவரது குடும்பம் நியூ கேசலுக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவரது தந்தை கார் விற்பனையாளராக பணிபுரிந்தார். இங்கே, பிடனின் குடும்பத்தில், அவரது பெற்றோர் மற்றும் நான்கு உடன்பிறப்புகள்,  இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் சிறிய வீட்டில் வசித்து வந்தனர். 1961-1965 காலப்பகுதியில், ஜோ பிடன் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

ALSO READ | Donald Trump: அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியா..!!!!

பிடென் பின்னர் சைராகஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் (Syracuse University College of Law) சட்ட படிப்பு படித்தார், அங்கு அவர் 1968 இல் ஜூரிஸ் டாக்டர் பட்டத்தை (Juris Doctor) பெற்றார், ஜூரிஸ் டாக்டர் பட்டம், அமெரிக்காவில் (America) சட்டத்தில் மிக உயர்ந்த பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.  அடுத்த ஆண்டு அவர் டெலாவேர் பாரில் (Delaware Bar)  சேர்ந்தார். அதில் பணிபுரிந்து கொண்டே, அரசியலில் இணைந்தார். மேலும் தனது 29 வயதில் 1972 இல் செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973 முதல் 2009 வரை செனட்டில் பணியாற்றினார். பிடென் டெலாவேரின் வரலாற்றில் மிக நீண்ட காலம் அமெரிக்க செனட்டராக இருந்துள்ளார். செனட் நீதித்துறை குழுவின் தலைவராகவும், தொடர்ந்து செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தருக்கு, வருத்தமளிக்கும் சம்பவங்களும் நேர்ந்தன. 1972 இல் அவர் செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் தனது முதல் மனைவி நீலியா மற்றும் மகள் நவோமி ஆகியோரை கார் விபத்தில் இழந்தார். மருத்துவமனை அறையிலிருந்து தான், முதல் செனட் பதவிக்காலத்திற்கும் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அந்த மருத்துவமனை அறையில் தான், கார் விபத்தில் இருந்து தப்பிய அவரது இரண்டு சிறிய குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.

ALSO READ | கமலா ஹாரிஸ் உறவினர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள US பயணம்..!!!

1987 ஆம் ஆண்டில், அவர் தனது ஜனாதிபதி பிரச்சாரத்தை முதன்முறையாகத் தொடங்கினார், ஆனால் இந்த பிரச்சாரம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, அவர் ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதியின் உரையைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். அடுத்த ஆண்டு, 1988 ஆம் ஆண்டில், ஜோ பிடெனுக்கு, மூளை நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். எப்படியோ அதில் உயிர் பிழைத்தார். 2008 ஆம் ஆண்டிலும், அவர் கட்சியில் நாமினேஷனிற்காக பிரச்சாரம் செய்தார். ஆனால் அதிக ஆதரவு கிடைக்காததால் மனம் மாறினார். இறுதியில், ஒபாமா (Barack Obama) அமெரிக்காவின் அதிபராக ஆன போது, ​​ஒபாமாவின் வலது கை செயல்பட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் அமெரிக்காவின் துணை முதல்வர் ஆனார்.

ஆனால், அவருக்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது. மே 2015 இல், அவரது மூத்த மகன் பியூ பிடன் மூளை புற்றுநோயால் இறந்தார். இந்த விபத்து ஜோ பிடனை உலுக்கியது, இது அவரது அரசியல் வாழ்க்கையிலும் தேக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிடென் ஒரு அரசியல் வாழ்க்கைக்குத் திரும்பினார். தனது பிரச்சார உரைகளின் போது அவர் தனது ஆதரவாளர்களிடம் சுகாதார மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக  பல வாக்குறுதிகளை அளித்ததற்கு இதுவே காரணம். ஒபாமாவின் காலத்தில் 2009 முதல் 2017 வரை சுகாதாரத்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களை முன்னோக்கி கொண்டு செல்வேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார்

ஜோ பிடன் தனது ஆதரவாளர்களிடையே 'மிடில் கிளாஸ் ஜோ' என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் இனி ஒரு நடுத்தர வர்க்க மனிதர் அல்ல.  உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் அதிகராகவும் இன்றுவரை ஒரு மில்லியனராகவும் இருக்கிறார். 2020 இல் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அவர் வெளிப்படுத்திய சொத்து தகவல்கள், அவரிடம் 9 மில்லியன் டாலர் சொத்துக்கள் இருப்பதாக கூறுகிறது.

அதிபராக ஆவதற்கு முன்பு, அவர் ஒபாமாவின் ஆட்சியில் துணை அதிபராக இருந்தார், அதற்கு முன்பு அவர் 1973 முதல் 2009 வரை செனட்டராக இருந்தார். செனட்டில் உள்ள பதிவுகளின்படி, இந்த காலகட்டத்தில் அவரது சம்பளம் ஆண்டுதோறும் 42,500 டாலரிலிருந்து 174,000 டாலராக அதிகரித்தது, அவர் துணைத் தலைவரானபோது, ​​அவரது சம்பளம் ஆண்டுதோறும் 230,000 டாலராக அதிகரித்தது.

நவம்பர் 2009 இல் ஜோ பிடனின் மொத்த சொத்துக்கள் வெறும் 30,000 டாலர்கள். துணைத் தலைவரின் முழு பதவிக் காலத்தையும் முடித்த பின்னர், அவர் 2019 ஜூலை மாதம் தனது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டார். ஜோ பிடென் மற்றும் அவரது மனைவியின் மொத்த சொத்துக்கள் 2017-18 ஆம் ஆண்டில் million 15 மில்லியனாக அதிகரித்துள்ளன என்பது தெரியவந்தது.

ALSO READ | சீனாவை ஒரு கை பார்க்காமல் டொனால்ட் டிரம்ப் கிளம்ப மாட்டார்: அரசியல் நிபுணர்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News