துப்பாக்கிச்சூட்டில் இறந்த 7-வது நபரின் உடல் ஒப்படைப்பு!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!!

Last Updated : Jun 25, 2020, 10:16 PM IST
துப்பாக்கிச்சூட்டில் இறந்த 7-வது நபரின் உடல் ஒப்படைப்பு!! title=

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 

இதை தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

 

Trending News