சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அதிர்ச்சி!

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

Last Updated : Mar 19, 2018, 10:32 AM IST
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அதிர்ச்சி! title=

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.  இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்தனர்.அவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில நாட்களிலேயே விமான நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News