7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, டிஏ 41% ஆக உயரும்

7th Pay Commission: தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 41 சதவீத அகவிலைப்படியுடன், ஊதியத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 7, 2022, 04:36 PM IST
  • மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இம்முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.
  • ஏஐசிபிஐ குறியீடு 131.4 புள்ளிகள் வரை இருந்தால் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும்.
7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, டிஏ 41% ஆக உயரும் title=

7வது ஊதியக்கமிஷன் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி காத்துக்கொண்டிருக்கிறது. மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதன் பின்னர் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை உயரும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. இம்முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும். நுகர்வோர் பணவீக்கத் தரவு (ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள்) மூலம் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது தெளிவாகியுள்ளது. 

ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன

ஆகஸ்ட் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் குறியீட்டு எண்கள் 0.3 புள்ளிகள் அதிகரித்துள்ளன. ஜூன் 2022 உடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 0.7 புள்ளிகள் அதிகரித்தது. அதாவது, இந்த வகையில் பார்த்தால், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மொத்த எண்ணிக்கையில் 1 சதவீதம் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஜூன் மாதத்தில், ஏஐசிபிஐ குறியீடு 129.2 ஆக இருந்தது. ஜூலையில் இந்த எண்ணிக்கை 129.9 ஐ எட்டியது. ஆகஸ்டில் அது 130.2 ஐத் தாண்டியது. வரும் மாதங்களில் குறியீட்டு எண் இன்னும் 1 சதவீதம் கூடினால், அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறியீடு 131.4 புள்ளிகள் வரை இருந்தால் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க  | 7th Pay Commission: அகவிலைப்படி உயர்வால் கிடைக்கும் பம்பர் ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ 

அகவிலைப்படி எவ்வளவு இருக்கும்

டி ஏ 3 சதவீதம் உயர்த்தப்பட்டால், மொத்த அகவிலைப்படி சதவீதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 41 சதவீத அகவிலைப்படியுடன், ஊதியத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும். அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே காணலாம். 

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. இதுவரையிலான அகவிலைப்படி (38%) - ரூ 21,622/மாதம்
3. புதிய அகவிலைப்படி (41%) - ரூ.23,329/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 23,329-21,622 = ரூ 1,707/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. இதுவரையிலான அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. புதிய அகவிலைப்படி (41%) - ரூ 7,380/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 7,380-6840 = ரூ 540/மாதம் அதிகரித்தது
5. ஆண்டு ஊதிய உயர்வு 540 X12 = ரூ 6480

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி, VDA உயர்ந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News