DA-க்குப் பிறகு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வாய்ப்பு! எவ்வளவு சம்பளம் உயரும்?

7th Pay Commission: ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.   

Written by - RK Spark | Last Updated : Nov 15, 2022, 10:38 AM IST
  • 7th Pay Commission: ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை.
  • தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • அதை 3.68 மடங்காக அதிகரிக்க ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
DA-க்குப் பிறகு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வாய்ப்பு! எவ்வளவு சம்பளம் உயரும்?  title=

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு நல்ல செய்தியினை வெளியிட்டுள்ளது, அதாவது அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை அரசு அதிகரிக்கப்போகிறது.   ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.  7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.  அரசு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் இதன் விளைவால் அரசு ஊழியர்களின் சம்பளமும் உயர வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? சரிபார்க்க வழிகள்!

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அடுத்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டுக்குப் பிறகு ஃபிட்மென்ட் காரணி உயர்வு குறித்து முக்கியமான முடிவினை அரசு எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.  மத்திய அரசு ஊழியர்கள் தற்போது வரை 2.57 என்ற ஃபிட்மென்ட் பேக்டரைப் பெறுகின்றனர், அதை 3.68 மடங்காக அதிகரிக்க ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  தற்போதைய ஃபிட்மென்ட் பேக்டர் விகிதத்தில், அரசு ஊழியரின் சம்பளம் ரூ.18,000 X 2.57 = ரூ.46,260. ஃபிட்மென்ட் காரணியை 3.68 மடங்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியரின் சம்பளம் ரூ.26,000 X 3.68 = ரூ.95,680 என்று இருக்கும்.

ஃபிட்மென்ட் காரணியை 3 மடங்கு உயர்த்த அரசாங்கம் ஒப்புதல் அளித்தால் ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.21,000 X 3 = ரூ. 63,000 ஆக இருக்கும்.  இதுமட்டுமின்றி அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை (ஹெச்ஆர்ஏ)வை உயர்த்தி, மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News